மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து, நேற்று விமான நிலையத்தை நோக்கி சென்ற வேன் மின்னேரியாவில்
விபத்துக்குள்ளானது.
மின்னேரியாவில் வைத்து தனியார் பஸ் வண்டியுடன் மோதியதில், இவ் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் வேனில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்த நிலையில், பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேனின் முன் பகுதி சேதமடைந்துள்ளதுடன், விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.