பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தனவின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு தீ வைத்தமை மற்றும் அவரது சகோதரரின் வீடு மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தமை போன்ற குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீரிகம, லோலுவாகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19, 22 மற்றும் 30 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைமையின்போது பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி குணவர்தன மற்றும் அவரது சகோதரரது வீடு, சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.