காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கோட்டா கோ கம’ எதிர்ப்பாளர்கள் 19 பேர், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலக வாயில்களை மறைத்து, உள்ளே செல்லவிடாது தடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.