அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஃபோல்புரூக் நகரில் 3 வயது சகோதரனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
தமது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியால் குறித்த குழந்தை சுடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.