விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என அதன்பின் கூறப்பட்டது.இதற்கு காரணம் என்னவென்றால், எப்போதுமே தனது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் தான் செல்லும் கல்யாண சுப நிகழ்வுகளுக்கு தனது மனைவி சங்கீதாவுடன் தான் நடிகர் விஜய் செல்வார். அதை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தனது மனைவி இல்லாமல் தனியாக தான் விஜய் வருகிறார். மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு பின் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வேறு அந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லைஇதுவே இவர்களுடைய பிரிவிற்கு காரணம் என பலரும் பேச துவங்கிவிட்டனர். இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. சங்கீதா தனது தந்தையின் வீட்டில் லண்டலின் செட்டிலாகிவிட்டார் என மூத்த பத்திரிகையாளர் ஒரு கூட கூறியிருந்தார்.
இந்நிலையில், அந்த மூத்த பத்திரிகையாளர் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இந்த பேட்டியில் பேசி அந்த மூத்த பத்திரிகையாளர் ‘விஜய் தனது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய்யை விட்டு பிரிய காரணம் அரசியல் தான். விஜய் அரசியலுக்கு வருவது சங்கீதாவிற்கும், மகன் சஞ்சய்க்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. அரசியல் வேண்டாம் என இருவரும் கூறியுள்ளனர். இதுவரை நாம் சேர்த்த சொத்து அனைத்தும் அரசியலில் போய்விடும் என்று கூறினார்களாம். ஆனால் அவர்கள் பேச்சை விஜய் கேட்காமல் அரசியலில் களமிறங்குவது தான் விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய்யை விட்டு பிரிய காரணம்’ என கூறியுள்ளார்.இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது முழுக்க முழுக்க அந்த மூத்த பத்திரிகையாளர் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.