சச்சித்ர சேனநாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

0
4

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் அம்பாந்தோட்டை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL)போட்டியின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்காக கிரிக்கெட் வீரர் தரிந்து ரத்னாயக்கவைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.