ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கருத்து வேறுபாடுகளை களைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.“நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்க் கொண்டு சஜித்தும் ரணிலும் ஒன்றுபடுவதே சிறந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கட்சி அரசியலைத் தொடரலாம்,” என்றார்.அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்