சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 1ஆம் திகதி இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 399 பேரை கடற்படையினர் மற்றும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயல்வோருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றே நாம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அவுஸ்திரேலியா அரசாங்கமானது, சட்டவிரோதமாக அந்நாட்டுக்கு செல்வோரை எவ்வகையிலும் அனுமதிக்காது என்பதுடன் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.