சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற நால்வர் கைது!

0
18

மஹியங்கனை, பகரகம்மனையில் இருந்து பதுளைக்கு உரிமம் இல்லாமல் ஒரு கெப் வாகனத்தில் சட்டவிரோதமாக ஆறு கால்நடைகள் கொண்டு செல்லப்பட்ட நான்கு சந்தேக நபர்களை பதுளை, துன்ஹிந்த பகுதியில் வைத்து இன்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பிரதேச போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் மஹியங்கனை, பகரகம்மன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 35, 34, 30 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (16) காலை மஹியங்கனை-பதுளை வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கெப் வாகனம், பதுளை அபகஹஓய பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பதுளை போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளை நிறுத்த முயன்றது கெப் வாகனம் நிற்காமல் பதுளை நகரத்தை நோக்கி வேகமாகச் சென்றது. இந்த வாகனத்தை துரத்திச் சென்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.