கடந்த 5 வருடங்களில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்களின் ஒரு தொகை, ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் நாளை அழிக்கப்படவுள்ளன. சுங்கத் திணைக்களத்தின் விசாரணைக்கு பின்னர் இந்த வாகன உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த உதிரி பாகங்கள் சந்தையில் வெளியிடப்பட்டால், தரமற்ற வாகனங்கள் கூட்டிணைக்கப்படும் அபாயம் உள்ளதால் உதிரி பாகங்களை அழிக்க நடவடிக்கை எடுத்ததாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.