சட்ட விரோதமாக பெற்றோல் ஏற்றிச்செல்ல முயன்ற மூன்று பேரை முச்சக்கரவண்டியுடன் நேற்று மாலை கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து இவர்கள் போக்குவரத்து பொலிஸாரால் சோதனையிடப்பட்ட போது கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக வியாபார நோக்கில் கிண்ணியா IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு பகுதிக்கு எடுத்துச் செல்ல முயன்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து 65 லீற்றர் பெற்றோல் இதனுடன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.