சந்திமாலின் தாய், சகோதரி உள்ளிட்ட அறுவர் கைது

0
434

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒன்றுக்கூடியமைக்காக, அழகுக் கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் தாய், சகோதரி உள்ளிட்ட அறுவரை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று(4) கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்றக் குற்றத்துக்காகவே, மேற்படி அறுவரையும் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியப் பகுதியில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.