நாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. ஆட்சி மாற்றம்
ஒன்றின் மூலம்தான் இந்த நிலைமைகளை மாற்றியமைக்க முடியும்.
இதற்காக அனைத்து எதிரணியினரும் ஓரணியில் வரவேண்டு
மென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கின் றார். 2015 – ஆட்சி மாற்றத்தின்போது சந்திரிகா குமாரதுங்க காத்திர மான தலையீடுகளை செய்திருந்தார். சிதறிக்கிடந்த அனைத்து எதிர ணிகளும் ஒன்றுதிரண்டன. இதில் சந்திரிகாவின் பங்கு முக்கியமானது. அதேபோன்று கொழும்பு மைய சிவில் சமூகங்களும் ஆட்சி மாற்றத் தின்போது, பிரதான பங்கு வகித்திருந்தன. கடந்த காலங்களில் தங்களுக் குள் முரண்பட்டிருந்த பலரும் ஓரணிக்கு வந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டுமென்
பதில் ஆர்வமாக இருந்த போதும், அவருக்கான வெற்றி வாய்ப்பு தொடர் பில் சந்தேகங்கள் இருந்தமையால் – மஹிந்த அணியிலிருந்த மைத்திரி பால சிறிசேன வெளியில் இழுத்தெடுக்கப்பட்டு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 2005 தேர்தலில் ஏற்பட்டது போன்றதொரு நிலைமையே ஏற்பட்டது.
2005 தேர்தலில், தமிழ் மக்கள் தேர்தலில் பங்குகௌளாமையால்,
ரணிலின் நிலைமை – கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போன
கதையானது. 2015 தேர்தலிலும் கிட்டத்தட்ட அவ்வாறானதொரு அணு குமுறை பிறிதொரு தந்திரோபாயத்துடன் கைக்கொள்ளப்பட்டது. ஜக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி, மைத்திரிபால அணியின் வாக்கு வங்கி, மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியும் ஓரிடத்தில் சங்கமித்தபோது, மஹிந்தவின் தோல்வி நிகழ்ந்தது. ஆனால், மைத்திரி பால சிறிசேன அணியினர் எதிர்பார்த்தது போல், மஹிந்தவின் வாக்கு வங்கியை பெருமளவுக்கு சரிக்க முடியவில்லை. இதுதான் பின்னர் பிரச்னையாகவும் மாறியது.
ஆட்சி மாற்றம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக இறங்கு முகத்தை
சந்தித்தது. ஏனெனில், ஆட்சி மாற்றத்திற்காக ஒன்றுபட்ட தரப்புக்கள்,
ஆட்சி மாற்றத்தை பாதுகாப்பதில் கரிசனையுடன் செயல்படவில்லை.
ரணில் – மைத்திரி முரண்பாட்டின்போது பெரும்பாலானவர்கள் ரணில் சார்பு நிலையை எடுத்திருந்தனர். கூட்டமைப்பு உட்பட. பெரும்பாலான வர்கள் ரணில் சார்பை எடுத்தபோது, மைத்திரி மஹிந்த சார்பை நோக் கித் தள்ளப்பட்டார். மஹிந்தவை வீழ்த்தும் நோக்கில் மேற்கோள்ளப்பட்ட எதிரணிக்கூட்டின் ஆட்சி மாற்றமானது, இறுதியில், ராஜபக்ஷக்களை பலப்படுத்துவதில் முடிவுற்றது. ஈஸ்டர் தாக்குதல் பழம் நழுவி பாலில் விழுந்த கதையானது. ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து ராஜபக்ஷக்களின் மீளெழுச்சி உறுதியானது.
இந்த அனுபவங்களின் மத்தியில்தான் சந்திரிகா மீண்டுமோர் ஆட்சி
மாற்றம் தொடர்பில் பேசுகின்றார். அவர் எவ்வாறான திட்டங்களை
மனதில் கொண்டிருக்கின்றார் என்பதற்கு அப்பால், ராஜபக்ஷக்களின்
பொதுஜன பெரமுன அரசாங்கம் முன்னைய செல்வாக்கோடு இல்லை
யென்பது உண்மைதான். ஆனால், ஆட்சியை, வேறு எவரேனும்
பொறுப்பெடுத்தாலும்கூட, அவர்களால் நாட்டை வேகமாகப் பழைய
நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா? ஏனெனில், அந்தளவுக்கு நாடு
நெருக்கடிக்குள் இருக்கின்றது. ஆனால், புதிய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தோடு ஒத்துழைப்பதன் மூலம் நாட்டை மீட்டெடுக்கும் யோசனையோடு இருக்கலாம்.
2024 சவால்கள் மிக்கதாகவே இருக்கப் போகின்றது. இதனை
உணர்ந்திருப்பதன் விளைவாகவே, ராஜபக்ஷக்கள் உள்ளூராட்சி
தேர்தல் மூலம் தங்களின் வெற்றி வாய்ப்பை நாடிபிடிக்க முற்படுகின்றனர்.
உள்ளூராட்சி தேர்தல் இடம்பெற்றால் சிங்கள மக்களின் மனோநிலையை இலகுவாக நாடிபிடித்துவிடலாம் என்பதே அவர்களின் திட்டமாக இருக் கின்றது. ஆனாலும் ராஜபக்ஷக்களை வீழ்த்துவது இலகுவான விடயமாக இருக்கப்போவதில்லை.