உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், மரணத்திற்கான காரணத்தை அறிவிக்க, நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என, வத்தளை நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான அறிவித்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் மனைவி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்த சட்டத்தரணி, விபத்து மற்றும் சனத் நிஷாந்தவின் மரணம் என்பன காரணமாக, தமது கட்சிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு, நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், வாகன விபத்து இடம்பெற்ற போது, குறித்த இடத்தில் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், கடந்த 24 ஆம் திகதி, அந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டதாக, நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவித்து, உடனடியாக மரண பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.