சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற கூட்டத்தில், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை நிறைவேற்றும் போது, சபாநாயகர் மகிந்த யாப்ப அபேயவர்தன, அரசியலமைப்பை மீறியதாக குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கே, இவ்வாறு ஆதரவு வழங்கவுள்ளனர்.