பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்தின் கட்சியின் காரியாலத்துக்கு தீமூட்டிய குற்றச்சாட்டில் நபரொருவர் குருணாகல் குளியாப்பியட்டிய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹலந்த இஹல எலதலாவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்தின் தும்மோதர குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கட்சி காரியாலயத்துக்கும் தீ வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே சந்தேக நபரொருவரை கைதுசெய்துள்ளனர்.