நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமையை விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. அவ்வாறு கட்சித் தலைமையை விமர்சிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சரத் பொன்சேகா ஜனாதிபதியுடன் இணைவதற்கு தயாராகி வருகிறார் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.