சரித்த ஹேரத்தை கோப் குழுவின் உறுப்பினராகக் கூட நியமிக்கமை முற்றிலும் தவறானது – டலஸ் அழகபெரும எம்.பி

0
125

கோப் குழுவின் தலைவராக செயற்பட்ட பேராசிரியர் சரித்த ஹேரத்தை கோப் குழுவின் உறுப்பினராகக் கூட நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முற்றிலும் தவறான விடயம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர ஆகியோர் தங்களது தனிப்பட்ட விடயங்கள் பற்றி பேசவில்லை.

கோப், கோபா குழுக்களின் நிலைமைகள் தொடர்பிலேயே பேசினர்.

மக்களின் அவதானம் அதிகமாகக் காணப்படும் குழுக்களாக கோப், கோபா குழுக்கள் காணப்படுகின்றன.

இந்த குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலேயே தயாசிறி ஜயசேகர, விமல் வீரவன்ச ஆகியோர் இந்த சபையில் எடுத்துரைத்தனர்.

அடுத்ததாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கு கதைப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டதில் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து எமது கோரிக்கைகளுக்கு செவிமடுத்தமைக்காக நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கோப் குழுவில் இந்த தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்தை கோப் குழுவின் உறுப்பினராகக் கூட நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஆளுங்கட்சி எடுத்த தீர்மானம் தவறானது.

எதிர்க் கட்சி சார்பில் அவரது பெயர் இன்றைய தினம் பரிந்துரைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி எதிர்க் கட்சி என்று பிரித்தாலும் சபாநாயகரே இறுதி தீர்மானம் எடுக்கும் நபராக செயற்படுகின்றார்.

சமூகம் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அவதானித்துக்கொண்டு இருக்கின்றது.

பேராசிரியர் சரித ஹேரத் கோப் குழுவின் தலைவராக செயற்படும் போது அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவி;லலை. முழு நாடும் அதனை ஏற்றுக்கொண்டது.

அவர் மிகவும் நேர்மையக செயற்பட்டார். அரச நிறுவனங்களில் ஊழல், மோசடிகள் வெளிக்கொண்டு வரப்பட்டன.

முழு நாடும் அவருக்கு மதிப்பளித்தது.

அரசாங்கம் ஏன் இவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் எனக்கு தெரியவில்லை.