தற்போதைய சூழ்நிலையில் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள். கட்சியின் பதவி மறுசீரமைப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக மாத்திரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.