சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

0
96
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர் குழுவொன்று இன்று இலங்கை வரவுள்ளது.இந்த குழுவினர் இலங்கை அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன கடந்த மார்ச் மாதம், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர், விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்தது.இந்த ஆதரவு திட்டம் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான பொருளாதார தாக்கத்தை குறைத்தல், நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நிர்வாக மற்றும் வளர்ச்சி திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.