அம்பாரை மாவட்டம் – கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினம் இன்று சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் பிரதான கணக்காய்வாளர் எச்.எம்.எம்.றசீட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜவாகிர் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருது பிரதான வீதியின் ஊடாக ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டு மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றறு.
சிறுவர்கள், கல்வி அதிகாரிகள், நிகழ்வின் பிரதம அதிதி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு கல்விப் பணியாற்றிய சிரேஸ்ட பிரஜை ஓய்வு பெற்ற விளையாட்டுத்துறை உதவிப் பணிப்பாளர் கே.செல்லத்துரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று அம்பாரை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்ற அல் – ஹிலால் வித்தியாலயத்தின் மாணவன் எம்.ஆர்.எப்.யூசுப் பாராட்டிகௌரவிக்கப்பட்டார்.