சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார்.
இன்று அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரண விசாரணையின் பின்னரே அவர் இவ்வாறு அறிக்கையிட்டார்.

மரணமடைந்த மாணவனின் சடலமானது சம்மாந்துறை பகுதியில் மார்க்க கடமைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாரத்ன மத்ரஸா பாடசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகளான ஏ.எல்.எம்.றவூப், ஆர்.டபிள்யூ.எம்.பி.ஜி.கே.எஸ்.மேகவர்ன உட்பட பொலிஸ் அதிகாரிகள்
இணைந்திருந்தனர்.

மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸா நிர்வாகியான மௌலவி கைது செய்யப்பட்டு, மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாளை கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபரான மௌலவி ஆஜர்ப்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.