எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில், சிகரெட் விலையை, விலை சூத்திரத்திற்கு அமைய அதிகரிக்க, முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒற்றையாக அல்லது சில்லறையாக, சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை நிறுத்த வேண்டும் எனவும், ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் நோக்கிலேயே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புகைபிடிக்கும் வயது வந்தவர்களில், 51 சத வீதத்தினர், புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.