சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு காரைதீவில் வர்த்தக சந்தை

0
191

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு காரைதீவுப் பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து மாபெரும் வர்த்தகச் சந்தையை ஏற்பாடு செய்தது.

கிராமப்புறங்களிலுள்ள உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.