சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் நாளைய தினம் விடுதலை

0
75

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, 779 கைதிகள், ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ், நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 779 கைதிகளும், நாளை விடுவிக்கப்படவுள்ளதாக, சிறைச்சாலை பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பீ திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.