சிறந்த வேட்பாளரை அடையாளம் காண வேண்டும் – பிரசன்ன

0
109
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்கொண்டுள்ள பிரச்சினையை சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட சிறந்த வேட்பாளரை தமது கட்சிக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நாமல் ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு காலம் கனிந்திருக்காத நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ போட்டியிட மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.பசில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பேன் ஆனால் அவர் போட்டியிடமாட்டார் .ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அண்மைய தீர்மானங்களுக்கு அதிக ஆதரவளிக்கும் ரணதுங்க, கட்சி வேறு ஒரு வேட்பாளரை நிறுத்தினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை குறித்து அவர் தீர்மானிக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.கம்பஹா மாவட்டம் உடுகம்பொலவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.