சிறுபோகத்திற்காக இதுவரையில் 2.5 பில்லியன் ரூபாய் பணம் விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2 இலட்சத்து 13 ஆயிரத்து 771 விவசாயிகளின் கணக்குகளுக்கு 2.5 பில்லியன் ரூபாய் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது.இந்த சிறுபோகத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாயம் செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் சிறுபோகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்காக மானிய தொகையாக 7.5 பில்லியன் ரூபாய் பணத்தை வைப்பிலிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.