சிறுவர்களின் பிரச்சனைகளை அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு இன்று இடம்பெற்றது.
செயலமரவு கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பினால் மட்டக்களப்பில் நடார்த்தப்பட்டது.
சிறுவர் உரிமைகள், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணை அறிக்கையிடல், சிறுவர் வன்முறைக்கு எதிராக புகாரளித்தல், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் ஆய்வு செய்தல் மற்றும் நேர்காணலில் சிறந்த நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.மஹ்ருப், வளவாளர் கலாநிதி எம்.சி. றஸ்மின், திட்ட உத்தியோகத்தர் ஆர்.நதியா, தொடர்பாடல் உதவியாளர் பி.கௌசலியா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.