கொழும்பு சீதாவாக்க ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், வெடிப்பொருட்களுடன் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்ணத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 53 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வெடிமருந்துகள், ஜெல்ட்னைட் குச்சிகள் உள்ளிட்ட வெடிப்பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.