உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியை சேதப்படுத்திய இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு ஷான்சி மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யூகவுண்டியில் உள்ள பெரிய சுவரின் ஒரு பகுதி சேதமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கமைய, 38 வயது ஆண் ஒருவரும் 55 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபடும் அவர்கள குறுக்குவழியை உருவாக்குவதற்காக சுவரை சேதப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
1987ஆம் ஆண்டில், சீனப் பெருஞ்சுவர் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.