நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம்(11) கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் சுகாதார ஒத்துழைப்புகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே, 42 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.