பிரிட்டன் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் பிரிட்டன் அரச குடும்ப இளவரசர் ஆண்ட்ரூவிற்கும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டிலிருந்து முன்னர் தடைசெய்யப்பட்ட நபரான யாங் டெங்போவிற்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து சி.என்.என் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
பிரிட்டன் அரச குடும்ப இளவரசர் ஆண்ட்ரூவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் யாங் டெங்போ, பிரிட்டன் உளவுத் துறையான எம்ஐ 5இன் பாதுகாப்பு மதிப்பீட்டால் வெளியிடப்பட்ட தீர்ப்பாய தீர்ப்பைத் தொடர்ந்து டிசம்பர் 2023 இல் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்த யாங், இளவரசர் ஆண்ட்ரூவுடன் நெருங்கிய உறவுகளை உருவாக்கியுள்ளார்.
யூரேசியா நிதி தொடர்பாக இளவரசர் ஆண்ட்ரூவிடமிருந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கிற்கு கடிதப் போக்குவரத்து வரையில் யாங் ஈடுபட்டிருந்தார்.
பிரிட்டனில் சீன முதலீட்டாளர்களுடனான சந்திப்புகளில் டியூக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் யாங் கூறினார். மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் உட்பட அரச குடும்பத்தினர் இந்த தகவல்தொடர்புகளைப் பற்றி அறிந்திருந்ததாகவும், அவற்றை ஆதரித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சீன உளவாளிகளுடனான இளவரசரின் தொடர்பு சர்வதேச வணிகத்தில் பிரிட்டன் அரச குடும்பத்தினரின் ஈடுபாடு குறித்து புதிய கேள்விகளை எழுப்புகின்றன. மேலும், பிரிட்டனில் வெளிநாட்டு ஆதிக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகப்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.