இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டை திரித்து சீன தூதரகத்தின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி போலி கடிதம் வெளியிடப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீன தூதுவர் தமக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.