சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இரவு நேர நீண்ட தூரத் தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.