‘சுடர் ஒளி’ பாலர் பாடசாலை கலை விழா – கௌரவிப்பு நிகழ்வு

0
140

யாழ். தென்மராட்சி மீசாலை வடக்கு ‘சுடர் ஒளி’ பாலர் பாடசாலையின் கலை விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் பாலர் பாடசாலை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

2024 ஆம் ஆண்டு புதிய வருடத்தில் தரம் ஒன்றிற்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான கௌரவிப்பும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன.

நிகழ்வில் தமிழ் இணையக் கல்விக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன், தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி மேற்பார்வையாளர் இராசலட்சுமி மயில்வாகனசிங்கம், பிரதேச மக்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.