29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாநாடு

சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிறி மேகநாதன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற மாநாட்டில், அமைப்பின் தலைவர் கலாநிதி ரீ.கப்பில ரன்ஜன் பெணான்டோ, விமானப்படையின் மட்டக்களப்பு கட்டளையதிகாரி கே.எச்.எம்.எச்.எஸ் பண்டார, சட்டத்தரணிகள், பொலிஸ் உயரதிகாரிகள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மனித உரிமைகள் தொடர்பில் சமூகத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில்சமூகத்தலைவர்கள் கருத்துத்தெரிவித்தனர். பிரச்சினைகளுக்கு சட்டரீதியிலான வழிகாட்டல்கள் மற்றும் தீர்வுகள் வழங்குவதற்கு ஏதுவாகவே மாவட்டங்கள் தோறும் அலுவலகங்கள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சுதந்திர மனித உரிமைகள் அமைப்பின் செயற்பாடுகளுக்கு பல்வேறு வழிகளில் ஒத்தாசைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிவரும் கிராம சேவையாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், கல்விமான்கள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட 35 பேர்
இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஊடக செயற்பாடுகள் மூலமாக ஒத்துழைப்பினை நல்கிவரும் ஊடகவியலாளர் ஏறாவூர் எம்.ஜி.ஏ.நாஸரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles