கிழக்கில் எமது அரசியல் இருப்பை இல்லாமல் செய்யும் காழ்ப்புணர்ச்சியில், சுமந்திரன் எம்.பி தன்னைப்பற்றி பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களை ஹன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டியது அவசியம் என்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அவர், ஒழுங்கு பிரச்சினையொன்றை ஏற்படுத்தி உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் எனக்கும் முறுகலை ஏற்படுத்தும் வகையில், 600 பொலிஸார் கொல்லப்பட்ட விடயத்துக்கும் எனக்கும் தொடர்பிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.