சுருக்கு வலை தொழிலால் மீனவர்கள் கடுமையாக பாதிப்பு

0
169

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை தொழிலால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை, யாழ்ப்பாணம் தொண்டைமனாறு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நடாத்தியுள்ளனர்.
இதில், வல்வெட்டித்துறை ஆதி கோயிலடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த இ.மதியழகன், தொண்டைமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த சி.மஞ்சீபன், மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த கே.குணராஜன், வளலாய் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த கில்பர்ட் குயின்ரன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.