சுற்றுலா தொழிற்துறை ஊடாக எதிர்காலத்தில் 3 பில்லியனுக்கும் அதிக டொலரை நாட்டின் பொருளாதாரத்திற்காக ஈட்ட எதிர்பார்ப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை வளர்ச்சியை காட்டுவதாக அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 2 இலட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்.
பெப்ரவரி மாதத்தில் ஒரு இலட்சத்து 522 பேர் நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.