சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பான அறிவிப்பு!

0
78

இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 1 இலட்சத்து 81 ஆயிரத்து 872 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் இருந்து வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 28 ஆயிரத்து 218 பேரும், ரஷ்யாவில் இருந்து 25 ஆயிரத்து 112 பேரும் ஜேர்மனியில் இருந்து 16 ஆயிரத்து 745 பேரும் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.