இரண்டு மாடி வீட்டொன்றில் சுவருக்கு நிற பூச்சு பூசிக் கொண்டிருந்த நபர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நபரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார் .
மீகொட பகுதியில் வசிக்கும் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
குறித்த நபர் மற்றுமொரு உதவியாளருடன் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டில் சுவரில் நிற பூச்சு பூசும் போதே அவர் தவறி கீழே விழுந்துள்ளார் .