செம்மணி மனித புதைகுழி – நீதி கிடைக்கும் வரை போராட்டத்துக்கு முடிவில்லை – சாணக்கியன்

0
1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வின் போது செம்மணி மனித புதைகுழி தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வலியுறுத்தினார்.

அதற்காக தங்களது தரப்பும் தொடர்ந்தும் போராடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி ‘அணையா தீபம்” போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.