யாழ்ப்பாணத்தில் இருந்து, சொகுசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற நபர், வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசுப் பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக, வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதற்கமைய, இன்று காலை, வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார், குறித்த பேருந்தை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதன் போது, பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் மீட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.