இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், ஐ.பி.எல் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்காக சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் அழைக்கும் பணியில் அந்ததந்த அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.