சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகரவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் இன்றைய தினம் அவரை தேடி கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சனசமூக கேந்திர நிலையத்துக்கு சென்றிருந்தனர்.
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் எரங்க குணசேகரவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவரை தேடி பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்.
குறித்த நிலையத்திலிருந்த மதகுரு உள்ளிட்ட தரப்பினரிடம் எரங்க குணசேரக தொடர்பில் கேட்டறிந்துகொண்ட பொலிஸார், அவர் அந்த நிலையத்தில் இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திகொண்டதன் பின்னர் அந்த நிலையத்திலிருந்து வெளியேறி சென்றுள்ளனர்.
எரங்க குணசேகர கைதுசெய்யப்படலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.