ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பொதுக் கூட்டம்!

0
50

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் கொட்டடி கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்றது.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடுத்து நிறுத்த வேண்டும்,சுருக்குவலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தொழில்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.


போதைப்பொருள் ஒழிப்பு 16 வயது வரை கட்டாய கல்வி உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வடக்கு மாகாண மீனவர்கள் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வழங்கி வைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் பங்கேற்றனர்.