ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தானும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களான கலாநிதி ரமேஷ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையும் தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என நான் நம்புகிறேன்.
எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறுவிதமாக கருதுகின்றனர்.
எங்களுக்கு கட்சி நிறங்கள் முக்கியமல்ல, தேசியக் கொடியே முக்கியம் என காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.