ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி, மட்டக்களப்பில் ஆரம்பம்

0
111

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான, வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி, மட்டக்களப்பில் இன்று ஆரம்பமானது. நேற்றைய தினம், வாக்குச் சீட்டுக்கள், தேர்தல்கள் செயலகத்தால், மட்டக்களப்பு மாவட்ட பிரதம அஞ்சல் அலுலகத்திடம்
கையளிக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளில் காணப்படும், தபாலகங்களுக்கு, வாக்குச்சீட்டுக்கள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், இன்று, வாக்களார் அட்டைகளை, வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு, வாக்குச்சீட்டுக்களை தபால் திணைக்கள ஊழியர்கள் எடுத்துச் சென்று விநியோகித்ததை அவதானிக்க முடிந்தது.

Sumber : jalalive

Sumber : jalalive