ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

0
60

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,041 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 172 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.