ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பொருளாதார காரணிகளுக்கு தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளோம் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு ஆட்சியில் இருந்த சகல அரசுகளும் பொறுப்புக்கூற வேண்டும்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க அனைத்து சவால்களையும் பொறுப்பேற்றார்.
பொருளாதார மீட்சிக்காக கடந்த ஆறுமாத காலமாக அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசாங்கத்தின் வரி கொள்கைக்கு எதிராக தற்போது போர்கொடி உயர்த்தும் தொழிற்சங்கத்தினர் நடுத்தர மக்களின் பொருளாதார நிலைமை குறித்து அவதானம் செலுத்தவில்லை.
நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.